நோ டூப்

கரணம் தப்பினால் மரணம் என்பது, சர்க்கஸ் வித்தைக்காரர்களுக்கு மட்டுமல்ல, சினிமாவில் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் பொருந்தும். அஜீத் நடிக்கும் ‘ஆழ்வார்’ படத்துக்காக அதிரடி சண்டைக் காட்சியைப் படமாக்கினார் சூப்பர் சுப்பராயன். ஒரு ரிஸ்க்கான ஷாட்டில், அஜீத்துக்குப் பதிலாக ‘டூப்’ ஒருவரை நடிக்க வைக்க ஏற்பாடு செய்தார். கேள்விபட்ட அஜீத், “டூப்பெல்லாம் வேண்டாம். நானே நடிக்கிறேன்” என்று, படப்பிடிப்புக் குழுவினரை வியப்பிலாழ்த்தி இருக்கிறார். பிறகு என்ன, ஜரூராக படப்பிடிப்பு நடந்தது. கஷ்டப்பட்டு அஜீத் நடித்த சண்டைக் காட்சியை 3 கேமராக்கள் படமாக்கின. ரசிகர்கள் பார்த்தால், அஜீத்துக்கு பெரிய ‘ஓ’ போடுவார்கள் என்கிறார்,