அஜீத் ஓகே செய்த டைரக்டர்

ஆழ்வார் படத்துப்பிறகு அஜீத் நடிக்கும் படத்தை 16 வருட இடைவெளிக்குப் பிறகு நடிகர் கே. பாலாஜி தயாரிக்கிறார். இவரது மகன் சுரேஷ் பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிறுவனமும் ரிலையன்ஸ் குரூப்பின் ஆட் லேப்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டார் அஜீத். இப்போது ப்ரியதர்ஷனின் உதவியாளர் விஜய் ஆனந்த் சொன்ன கதை ஓகே ஆகிவிட்டதாம். விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.